மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி நவ.25-ஆம் தேதி போராட்டம்-கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவிப்பு

மின் கட்டண உயர்வை தமிழக அரசு முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் வரும் 25-ஆம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதம் மற்றும் கதவடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.



கோவை: கோவையில் பல்வேறு தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சைமா அரங்கில் நடைபெற்றது.



அப்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சிவசண்முக குமார், சுருளிவேல் உள்ளிட்டோர் பேசியதாவது, கொரோனா காரணமாக ஏற்கனவே சிறு குறு தொழில் செய்வோர் கடந்த 2 ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், மின் கட்டண உயர்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.



குறிப்பாக சிறு குறு தொழில்கள் முடங்கும் அளவிற்கு பீக் ஹவர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் சிறு குறு தொழில் முழுவதும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறினர். எனவே குறு சிறு தொழில்கள் முனைவோர்கள் பயன்படுத்தும் பீக் ஹவர் கட்டண உயர்வை தமிழக அரசு முழுமையாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.



எனவே குறு சிறு தொழில்களை பாதுகாக்க 112 kw வரை முன்பு இருந்த நிலைக்கட்டணம் ரூபாய் 35 மட்டும் தொடர அரசு நடவடிக்கை எடுப்பதுடன், பீக் அவர் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி, போசியா கூட்டமைப்பின் 18 தொழில் அமைப்புக்கள் இணைந்து, கோவையில் வரும் 25-ம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதம் மற்றும் தொழில் கூடங்கள் ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...