மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி நவ.25-ஆம் தேதி போராட்டம்-கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவிப்பு

மின் கட்டண உயர்வை தமிழக அரசு முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் வரும் 25-ஆம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதம் மற்றும் கதவடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.



கோவை: கோவையில் பல்வேறு தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சைமா அரங்கில் நடைபெற்றது.



அப்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சிவசண்முக குமார், சுருளிவேல் உள்ளிட்டோர் பேசியதாவது, கொரோனா காரணமாக ஏற்கனவே சிறு குறு தொழில் செய்வோர் கடந்த 2 ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், மின் கட்டண உயர்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.



குறிப்பாக சிறு குறு தொழில்கள் முடங்கும் அளவிற்கு பீக் ஹவர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் சிறு குறு தொழில் முழுவதும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறினர். எனவே குறு சிறு தொழில்கள் முனைவோர்கள் பயன்படுத்தும் பீக் ஹவர் கட்டண உயர்வை தமிழக அரசு முழுமையாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.



எனவே குறு சிறு தொழில்களை பாதுகாக்க 112 kw வரை முன்பு இருந்த நிலைக்கட்டணம் ரூபாய் 35 மட்டும் தொடர அரசு நடவடிக்கை எடுப்பதுடன், பீக் அவர் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி, போசியா கூட்டமைப்பின் 18 தொழில் அமைப்புக்கள் இணைந்து, கோவையில் வரும் 25-ம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதம் மற்றும் தொழில் கூடங்கள் ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...