திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு தியாகி திருப்பூர் குமரன் பெயரை சூட்ட வேண்டும்-பாஜகவின் வேலூர் இப்ராகிம் வலியுறுத்தல்

காஷ்மீரை விட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளதாக திருப்பூரில் பேட்டியளித்த பாஜகவின் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் குற்றம்சாட்டியுள்ளார். .



திருப்பூர்: பல்லடம் வித்தியாலயம் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜகவின் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது அவர் பேசியதாவது, கடந்த 8 ஆண்டுகளில் பாஜக அரசு சிறுபான்மையினருக்கு செய்த திட்டங்களையும் கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் செய்த திட்டங்கள் குறித்து விவாதிக்க திமுக அரசு தயாரா என கேள்வி எழுப்பினர்.

சிறுபான்மையினருக்காக எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்தாத திமுக அரசு ஓட்டு வங்கிக்காக பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு மோசமானதாக இருப்பதாக சாடிய அவர்,பெட்ரோல் குண்டு,மனித வெடிகுண்டு தாக்குதல் கார் குண்டு வெடிப்பு உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார்.

காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு கொண்டு வருவதற்கு முன்பாக எந்த அளவுக்கு பாதுகாப்பற்றதாக இருந்ததோ அந்த அளவுக்கு தமிழகம் தற்போது இருப்பதாக வேலூர் இப்ராகிம் குற்றம்சாட்டினார்.

ஆன்மீகத்தை அதிகளவு நேசிக்கக்கூடிய மக்கள் வசிக்கக்கூடிய திருப்பூர் மாநகரில் ஆன்மிகத்தை எதிர்த்த கலைஞரின் பெயரை பேருந்து நிலையத்திற்கு சூட்டுவதற்கு பாஜக வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதாக கூறிய அவர், எனவே சுதந்திரத்திற்காக போராடிய தியாகி திருப்பூர் குமரன் பெயரை சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.



தமிழக அரசின் செயல்பாடுகளை மக்கள் கூர்ந்து கவனித்து வருவதாக கூறிய இப்ராகிம், தமிழகத்தில் ஐஎஸ் அமைப்பு மற்றும் அதன் தொடர்பு 100 சதவிகிதம் இருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த முடியாத வகையில் தமிழக காவல்துறையும், உளவுத்துறையும் செயலற்று இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...