திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு தியாகி திருப்பூர் குமரன் பெயரை சூட்ட வேண்டும்-பாஜகவின் வேலூர் இப்ராகிம் வலியுறுத்தல்

காஷ்மீரை விட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளதாக திருப்பூரில் பேட்டியளித்த பாஜகவின் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் குற்றம்சாட்டியுள்ளார். .



திருப்பூர்: பல்லடம் வித்தியாலயம் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜகவின் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது அவர் பேசியதாவது, கடந்த 8 ஆண்டுகளில் பாஜக அரசு சிறுபான்மையினருக்கு செய்த திட்டங்களையும் கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் செய்த திட்டங்கள் குறித்து விவாதிக்க திமுக அரசு தயாரா என கேள்வி எழுப்பினர்.

சிறுபான்மையினருக்காக எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்தாத திமுக அரசு ஓட்டு வங்கிக்காக பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு மோசமானதாக இருப்பதாக சாடிய அவர்,பெட்ரோல் குண்டு,மனித வெடிகுண்டு தாக்குதல் கார் குண்டு வெடிப்பு உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார்.

காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு கொண்டு வருவதற்கு முன்பாக எந்த அளவுக்கு பாதுகாப்பற்றதாக இருந்ததோ அந்த அளவுக்கு தமிழகம் தற்போது இருப்பதாக வேலூர் இப்ராகிம் குற்றம்சாட்டினார்.

ஆன்மீகத்தை அதிகளவு நேசிக்கக்கூடிய மக்கள் வசிக்கக்கூடிய திருப்பூர் மாநகரில் ஆன்மிகத்தை எதிர்த்த கலைஞரின் பெயரை பேருந்து நிலையத்திற்கு சூட்டுவதற்கு பாஜக வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதாக கூறிய அவர், எனவே சுதந்திரத்திற்காக போராடிய தியாகி திருப்பூர் குமரன் பெயரை சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.



தமிழக அரசின் செயல்பாடுகளை மக்கள் கூர்ந்து கவனித்து வருவதாக கூறிய இப்ராகிம், தமிழகத்தில் ஐஎஸ் அமைப்பு மற்றும் அதன் தொடர்பு 100 சதவிகிதம் இருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த முடியாத வகையில் தமிழக காவல்துறையும், உளவுத்துறையும் செயலற்று இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...