ஈச்சனாரி அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்ற 4 பேர் கைது - 6 கிலோ கஞ்சா பறிமுதல்…!

கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த கிணத்துக்கடவை சேர்ந்த காதர் பாட்ஷா (27), கணேசபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (26), மணிகண்டன் (24), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அகிலேஷ் (22) என்ற 4 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.



கோவை: கோவை ஈச்சனாரி அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், மதுக்கரை அடுத்த ஈச்சனாரி தனியார் கல்லூரி அருகே கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நான்கு பேரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் கிலோ கணக்கில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, நான்கு பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பிடிபட்ட நபர்கள் கிணத்துக்கடவை சேர்ந்த காதர் பாட்ஷா (27), கணேசபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (26), மணிகண்டன் (24), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அகிலேஷ் (22) என்பது தெரியவந்தது.

மேலும், இவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்ய அங்கு வந்திருந்ததும் தெரியவந்தது. இதில், பிடிப்பட்ட சபீர் என்பவர் மீது மதுக்கரை காவல் நிலையத்தில் கொலை வழக்கும், செட்டிபாளையம் காவல் நிலையத்தில் சங்கிலி பறிப்பு வழக்கும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

அதேபோல், ரவிக்குமார் மீது போத்தனூர் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு, மணிகண்டன் மீது செட்டிபாளையம் காவல் நிலையத்தில் செயின் பறிப்பு வழக்கு, அகிலேஷ் மீது காரமடை காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சுமார் 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...