வேளாண் பல்கலையில் மாபெரும் வேளாண் விழிப்புணர்வு விழா


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இளநிலை வேளாண் மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ‘அக்ரோநோவா 17’ பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. 

இவ்விழாவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பழங்கால அரிய வேளாண்பொருட்கள் கொண்ட வேளாண் அறிவியல் கண்காட்சியும், இக்கால வேளாண் தொழில்நுட்ப மாதிரிகளும் பங்கேற்பாளர் பார்வைக்கு வைக்கப்பட இருக்கின்றன. 

மேலும், இந்நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் மாணவ மாணவியர் அறிவு மற்றும் சிந்தனைத் திறனைத் தூண்டும்விதமாக பற்பல போட்டிகள் நடக்கவிருக்கின்றன. இதில், பங்கேற்கும் அனைத்து மாணவ மாணவியருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. 

இதன் ஒரு பகுதியாக வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து விஞ்ஞனிகளை அழைத்து வேளாண் விழிப்புணர்வு பற்றிய சிறப்புரைகளும் வழங்கப்பட உள்ளன. இவ்விழாவின் மூலமாக வேளாண்மையின் பழமையினை இளைய சமுதாயத்திற்கு உணர்த்தி அதன் இன்றைய நிலைபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, பங்கேற்கும் ஒவ்வொரு இளைய தலைமுறைக்கும் வேளாண்மை என் தலையாய கடமை என்னும் விதையினை மனதில் ஊன்ற அக்ரோநோவா 17 ஒரு அற ஆயுதமாக செயல்படும் என நம்பப்படுகிறது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...