திருப்பூரில் அரசு பள்ளியில் நடைபெற்ற பழங்கால நாணயவியல் கண்காட்சி - ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

பாண்டியன் நகரில் உள்ள மாநராட்சி துவக்க பள்ளியில் இந்திய மற்றும் வெளிநாட்டு பழங்கால நாணய கண்காட்சியில், மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டு ஆர்வமுடன் நாணயங்களை பார்வையிட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகரில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில், இந்திய மற்றும் வெளிநாட்டு பழங்கால நாணயவியல் கண்காட்சி நடைபெற்றது.



இந்த கண்காட்சியில் சங்ககால நாணயங்கள், ஒரு அணா, அரை அணா, ஒரு பைசா, இரண்டு, மூன்று, ஐந்து பைசா உள்ளிட்ட அனைத்து வகையான நாணயங்கள், இந்திய அரசால் வெளியிடப்பட்ட அனைத்து சிறப்பு நாணயங்கள் மற்றும் இந்தியாவின் பழைய நாணயங்கள் என அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டன.



மேலும் இலங்கை, ஜப்பான், நேபாளம், இந்தோனேசியா போன்ற வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் டாலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த கண்காட்சியில் 500க்கு மேற்பட்ட நாணயங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த கண்காட்சியில் மாணவர்களும், பெற்றோர்களும்பங்கேற்று ஆர்வத்துடன் நாணயங்களை பார்வையிட்டனர்.



Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...