கோவையில் ஆயுதப்படை காவலர்கள் செல்லும் வாகனங்களில் சிறிய நூலகம் - தொடங்கி வைத்த மாநகர காவல் ஆணையர்.

காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ஆயுதப்படை காவலர்கள் பணிக்கு சென்று வரும் வாகனத்தில் சிறிய அளவிலான நூலகம் அமைக்கப்பட்டு உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறினார்.



கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில் போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக காவல் நிலையங்கள், மக்கள் கூடும் இடங்களில் நூலகங்கள் அமைக்கப்பட்டன. மேலும், காவல்துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே கோவையில் ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பணி நிமித்தமாக அழைத்துச் செல்லும் வாகனங்களில் நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது.



தமிழ் இலக்கியங்கள், உரை நடை, கவிதைகள் அடங்கிய புத்தகங்கள் இந்த நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நூல்கத்தை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்து போலீசாருக்கு புத்தகங்களை வழங்கினார்.



துவக்க விழா நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, விளையாட்டுப் போட்டிகள், போலீசாருக்கான உடற்பயிற்சி கூடம், நூலகம் ஆகியவை காவல் நிலையங்களிலேயே அமைக்கப்பட்டன.

தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த நூலகம் மூலமாக வெளியூர்களுக்கு பணிக்கு செல்லும் காவலர்கள் பணி முடிந்ததும், புத்தகங்களை எடுத்து படிக்க முடியும்.

இவ்வாறுமாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...