பல்லடம் அருகே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என திட்டவட்டம்

பல்லடம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க ஏற்கனவே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் படுஜோராக கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், ஒருபோதும் திறக்க அனுமதிக்க மாட்டோம் என பொதுமக்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் உள்ள சேடபாளையம் கிராமத்தில் மங்கலம் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.



இந்த செய்தி காட்டுதீ போல் பரவியதை அடுத்து ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.



தகவறிந்து சென்ற பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் டாஸ்மாக் அமைய உள்ள இடம் பல்லடம் நகராட்சி எல்லைக்குட்பட்டதா? அல்லது ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட இடமா? என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.



பின்னர் ஒரு வழியாக ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி என ஊர்ஜிதப்பட்டது. டாஸ்மாக் கடை திறப்பது குறித்து தெரிவித்துள்ள பொதுமக்கள், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே இடத்தில் கடை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அப்போது எழுந்த எதிர்ப்பு காரணமாக கைவிடப்படதாகவும் கூறினார்.

ஆனால் தற்பொது மீண்டும் கடையை ஏற்பாடுகள் நடைபெறுவதாக கூறியுள்ள பொதுமக்கள் ஒருபோதும் மதுபான கடையை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...