கோவை மேற்கு மண்டலத்தில் சாலை அமைக்க இடம்‌ வழங்கியவர்களுக்கு மேயர், மாநகராட்சி ஆணையாளர் நேரில் நன்றி

கோவை மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்த நிலையில், வார்டு என் 43-க்குட்பட்ட கவுண்டசாமி நாயுடு வீதி-பொங்காளி கோணார்‌ வீதிகளை இணைத்து புதிய சாலை அமைக்க இடம் வழங்கியவர்களுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் நன்றி தெரிவித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.43-க்குட்பட்ட சுப்ரமணியபுரம்‌, வெங்கிட்டாபுரம்‌, புவனேஸ்வரி நகரில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் நேரில்‌ ஆய்வு செய்து, புதிதாக வார்டு அலுவலகம்‌ கட்டுவதற்கும்‌ உரிய திட்டமதிப்பீடு தயாரிக்கவும்‌, மழைநீர்‌ வடிகால்‌ தூர்வாருவதற்கும்‌ சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.



இந்த நிகழ்வில் உதவி ஆணையாளர்‌ சேகர்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா மற்றும் மாநகராட்சி அலுவலா்கள்‌ உடனிருந்தனர்.

இதேபோன்று சுப்ரமணியபுரம்‌, வெங்கிட்டாபுரம்‌, புவனேஸ்வரி நகர் பகுதிகளில் நில அளவை செய்து, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட உதவி நகரமைப்பு அலுவலருக்கு ஆணையாளர் பிரதாப் உத்தரவிட்டார்‌. இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.



இதனைதொடர்ந்து புவனேஸ்வரி நகரில்‌ 25 லட்சம்‌ ரூபாய் மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ நகர்நல மைய கட்டடப்பணியினை மாநகராட்சி ஆணையாள பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு, பணியினை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து விரைவில்‌ பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினார்‌.



இதேபோன்று புவனேஸ்வரி நகரில்‌ பயன்பாட்டில்‌ இல்லாத நுண்ணுயிர்‌ உரம் தயாரிக்கும்‌ மையத்தை பார்வையிட்டு உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர பொறியாளர்களுக்கு ஆணையாளர்‌ பிரதாப்‌ அறிவுறுத்தினார்‌. இந்த நிகழ்வில் உதவி ஆணையாளர்‌ சேகர்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.



இதனைதொடர்ந்து புவனேஸ்வரி நகரில்‌ சுமார்‌ 200 மீட்டர் தொலைவிற்கு மழைநீர் வடிகால்‌ அமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் அறிவுறுத்தினார்‌. இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதனிடையே வார்டு எண் 43-க்குட்பட்ட கவுண்டசாமி நாயுடு வீதி-பொங்காளி கோணார்‌ வீதி ஆகிய இரண்டு வீதிகளையும் இணைத்து போக்குவரத்து வசதிக்காக ஈஸ்வரன்‌ செட்டியார்‌, கிருஷ்ணன்‌ செட்டியார்‌ ஆகியோர் சார்பில்‌ வழங்கப்பட்ட 4 3/4 சென்ட்‌ இடத்தில்‌ மாநகராட்சி சார்பாக 3 லட்சம்‌ ரூபாய் மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட்ட கான்கிரீட்‌ சாலையை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டனர். மேலும் சாலை அமைக்க இடம்‌ வழங்கியவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர்‌. இந்த நிகழ்வின்போது மாமன்ற உறுப்பினர்கள்‌ மல்லிகா, சம்பத்‌, பிரவீன்ராஜ்‌, உதவி ஆணையாளர்‌ சேகர்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...