கிணத்துக்கடவு அடுத்த வடபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

வடபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


கோவை: தமிழக மக்கள் நலவாழ்வுத் துறை சார்பில் கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமை கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் தொடங்கி வைத்தார்.

மருத்துவ முகாமில் வடபுதூர் கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,கண்பார்வை குறைபாடு போன்ற பல்வேறு நோய்களுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.



மருத்துவ முகாமில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், வடபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அபின்யா அசோக்குமார், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கல்லாபுரம் செந்தில், கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல், கிணத்துக்கடவு நகர திமுக செயலாளர் கற்பக விநாயக கனகராஜ், திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...