வடபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
கோவை: தமிழக மக்கள் நலவாழ்வுத் துறை சார்பில் கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமை கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் தொடங்கி வைத்தார்.
மருத்துவ முகாமில் வடபுதூர் கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,கண்பார்வை குறைபாடு போன்ற பல்வேறு நோய்களுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவ முகாமில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், வடபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அபின்யா அசோக்குமார், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கல்லாபுரம் செந்தில், கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல், கிணத்துக்கடவு நகர திமுக செயலாளர் கற்பக விநாயக கனகராஜ், திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமை கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் தொடங்கி வைத்தார்.
மருத்துவ முகாமில் வடபுதூர் கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,கண்பார்வை குறைபாடு போன்ற பல்வேறு நோய்களுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவ முகாமில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், வடபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அபின்யா அசோக்குமார், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கல்லாபுரம் செந்தில், கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல், கிணத்துக்கடவு நகர திமுக செயலாளர் கற்பக விநாயக கனகராஜ், திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.