பாலக்கொலா ஊராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பாலக்கொலா ஊராட்சியில் ரூ. 29.40 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.பி.அம்ரித் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலங்களை மீட்டு பாதுகாப்பு வேலி அமைத்த அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் பாலக்கொலா ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ. 29.40 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.பி.அம்ரித்நேரில் ஆய்வு செய்தார்.



உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலக்கொலா பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டத்தின் கீழ் இந்திரா நகரில் முத்து வீடு முதல் பாபு வீடு வரை ரூ.4.40 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வடிகால் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் நடைபாதையினை மாவட்ட ஆட்சிதலைவர் எஸ்.பி.அம்ரித் நேரில் ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து பீ.மணியட்டியில் ரூ. 3 இலட்சம் மதிப்பில் பால் சொசைட்டி முதல் ஆல்துரை வீடு வரை நடைபெற்று வரும் சிமெண்ட் கான்கிரீட் நடைபாதையினையும், பழுதடைந்தஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்ப பள்ளியின் கட்டடத்தை தரைமட்டமாக்கி 15-வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.22 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பணியினையும் பார்வையிட்டார்.



மேலும் இந்திரா நகர் பகுதியில் அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மீட்கப்பட்ட இடத்திற்கு வேலி அமைத்து பாதுகாப்பு செய்யப்படுவதை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், செயற்பொறியாளர் சுஜாதா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...