பாலக்கொலா ஊராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பாலக்கொலா ஊராட்சியில் ரூ. 29.40 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.பி.அம்ரித் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலங்களை மீட்டு பாதுகாப்பு வேலி அமைத்த அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் பாலக்கொலா ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ. 29.40 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.பி.அம்ரித்நேரில் ஆய்வு செய்தார்.



உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலக்கொலா பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டத்தின் கீழ் இந்திரா நகரில் முத்து வீடு முதல் பாபு வீடு வரை ரூ.4.40 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வடிகால் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் நடைபாதையினை மாவட்ட ஆட்சிதலைவர் எஸ்.பி.அம்ரித் நேரில் ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து பீ.மணியட்டியில் ரூ. 3 இலட்சம் மதிப்பில் பால் சொசைட்டி முதல் ஆல்துரை வீடு வரை நடைபெற்று வரும் சிமெண்ட் கான்கிரீட் நடைபாதையினையும், பழுதடைந்தஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்ப பள்ளியின் கட்டடத்தை தரைமட்டமாக்கி 15-வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.22 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பணியினையும் பார்வையிட்டார்.



மேலும் இந்திரா நகர் பகுதியில் அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மீட்கப்பட்ட இடத்திற்கு வேலி அமைத்து பாதுகாப்பு செய்யப்படுவதை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், செயற்பொறியாளர் சுஜாதா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...