அவிநாசி சாலை, ஹோப் காலேஜ் சிக்னல் அருகே கார் வந்த போது, காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதையடுத்து, உடனே காரில் இருந்தவர்கள் வெளியே வந்தனர். சிறிது நேரத்தில் காரில் மளமளவென தீ பற்றியது.
கோவை: கோவை நீலிக்கோணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா. இவர் ஏடிஎம் ஃபீல்டு ஆபீஸராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் அவிநாசி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கார் ஹோப் காலேஜ் சிக்னல் அருகே வந்த போது, காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதையடுத்து, உடனே சாலை ஓரமாக ஜோஸ்வா காரை நிறுத்தியுள்ளார். பின்னர் அனைவரும் காரை விட்டு வெளியேறினர்.
சிறிது நேரத்தில் காரின் முன் பகுதியில் இருந்து தீ பற்றி எரிய துவங்கியுள்ளது. தொடர்ந்துகார் முழுவதும் மளமளவென தீ பற்றியது.
தகவல் அறிந்து வந்த பீளமேடு தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். காரில் பயணித்த அனைவரும் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.