கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்: கோரிக்கைகளை ஒன்றிய பொது நிதியிலிருந்து நிறைவேற்ற வேண்டும் - கவுன்சிலர்கள் கோரிக்கை

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், கிராம பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை செப்பனிடுதல், அங்கன்வாடி கட்டடங்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.



கோவை: பொள்ளாச்சி சாலையில் உள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் நாகராணி தலைமையில் ஒன்றிய குழு கவுன்சிலர் கூட்டம் இன்று நடைபெற்றது.



வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஒன்றிய கவுன்சிலர்கள், கிராம பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை செப்பனிட வேண்டும், அங்கன்வாடி கட்டடங்களை மேம்படுத்த வேண்டும், ஒன்றிய கவுன்சிலர்கள் கோரிக்கை வைக்கும் பணிகளை ஒன்றிய பொது நிதியிலிருந்து ஒதுக்கி பணிகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...