கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்: கோரிக்கைகளை ஒன்றிய பொது நிதியிலிருந்து நிறைவேற்ற வேண்டும் - கவுன்சிலர்கள் கோரிக்கை

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், கிராம பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை செப்பனிடுதல், அங்கன்வாடி கட்டடங்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.



கோவை: பொள்ளாச்சி சாலையில் உள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் நாகராணி தலைமையில் ஒன்றிய குழு கவுன்சிலர் கூட்டம் இன்று நடைபெற்றது.



வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஒன்றிய கவுன்சிலர்கள், கிராம பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை செப்பனிட வேண்டும், அங்கன்வாடி கட்டடங்களை மேம்படுத்த வேண்டும், ஒன்றிய கவுன்சிலர்கள் கோரிக்கை வைக்கும் பணிகளை ஒன்றிய பொது நிதியிலிருந்து ஒதுக்கி பணிகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...