கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் அரசுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு - வருவாய்த்துறை நடவடிக்கை

கோவை கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் அரசுக்கு சொந்தமான 25 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் வருவாய்த்துறையினர் நேரில் சென்று மீட்டெடுத்தனர்.மேலும் மீட்டெடுத்த நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டது.



கோவை: கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட தேரோடும் வீதியில் பொன்மலை வேலாயுதசாமி கோவில் அருகே 14 சென்ட் நிலமும், சிவலோக நாதர் கோவில் பகுதியில் 11 சென்ட் நிலமும் என மொத்தம் 25 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது.

இந்த புகாரை தொடர்ந்து வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக புகார் வந்த நிலங்களை அளவீடு செய்தனர்.

அந்த அளவீட்டில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது உறுதியாகின பிறகு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தை உரிய நட்வடிக்கையில் மீட்டெடுத்தனர்.

பின்னர் வருவாய்த்துறையினரால் மீட்கபட்ட நிலத்தை சுற்றி இனி இதுபோல் நிகழாதவாறு கம்பி வேலி அமைக்கப்பட்டது.

இந்த பணியின் போது கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா, மண்டல துணை தாசில்தார் ராமராஜ், வருவாய் ஆய்வாளர் லலிதா, கிராம நிர்வாக அலுவலர் விமல் மாதவன் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்து பார்வையிட்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...