கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் அரசுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு - வருவாய்த்துறை நடவடிக்கை

கோவை கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் அரசுக்கு சொந்தமான 25 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் வருவாய்த்துறையினர் நேரில் சென்று மீட்டெடுத்தனர்.மேலும் மீட்டெடுத்த நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டது.



கோவை: கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட தேரோடும் வீதியில் பொன்மலை வேலாயுதசாமி கோவில் அருகே 14 சென்ட் நிலமும், சிவலோக நாதர் கோவில் பகுதியில் 11 சென்ட் நிலமும் என மொத்தம் 25 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது.

இந்த புகாரை தொடர்ந்து வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக புகார் வந்த நிலங்களை அளவீடு செய்தனர்.

அந்த அளவீட்டில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது உறுதியாகின பிறகு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தை உரிய நட்வடிக்கையில் மீட்டெடுத்தனர்.

பின்னர் வருவாய்த்துறையினரால் மீட்கபட்ட நிலத்தை சுற்றி இனி இதுபோல் நிகழாதவாறு கம்பி வேலி அமைக்கப்பட்டது.

இந்த பணியின் போது கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா, மண்டல துணை தாசில்தார் ராமராஜ், வருவாய் ஆய்வாளர் லலிதா, கிராம நிர்வாக அலுவலர் விமல் மாதவன் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்து பார்வையிட்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...