நீலகிரி கூடலூர் அருகே உப்பட்டி சாலையில் உலா வந்த சிறுத்தை - வாகன ஓட்டிகள் அச்சம்

கூடலூரில் இருந்து பந்தலூர் செல்லும் உப்பட்டி சாலையில் உலா வந்த சிறுத்தை ஒன்று வாகனத்தை கண்டதும் சாலையை கடந்து செல்லும் காட்சிகள் பரவி வரும் நிலையில், வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்க வனத்துறை அறிவுறுத்தல்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவிலான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதனால் அப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

குறிப்பாக இரவு நேரங்களில் தேயிலை தோட்டங்களில் சிறுத்தைகள் அதிகமாக நடமாடுவதுடன் குடியிருப்பு பகுதிகளுக்கும் வருகின்றன. இந்நிலையில் பந்தலூரில் இருந்து உப்பட்டி செல்லும் பிரதான சாலையில் சிறுத்தை ஒன்று வாகனத்தை கண்டவுடன் சாலையைக் கடந்து அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்கு சென்றது.



இதனால் வனப்பகுதியை ஒட்டிய தேயிலை தோட்டங்களில்அடிக்கடி நடமாடும் சிறுத்தையால் தேயிலை தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...