நீலகிரி கூடலூர் அருகே உப்பட்டி சாலையில் உலா வந்த சிறுத்தை - வாகன ஓட்டிகள் அச்சம்

கூடலூரில் இருந்து பந்தலூர் செல்லும் உப்பட்டி சாலையில் உலா வந்த சிறுத்தை ஒன்று வாகனத்தை கண்டதும் சாலையை கடந்து செல்லும் காட்சிகள் பரவி வரும் நிலையில், வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்க வனத்துறை அறிவுறுத்தல்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவிலான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதனால் அப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

குறிப்பாக இரவு நேரங்களில் தேயிலை தோட்டங்களில் சிறுத்தைகள் அதிகமாக நடமாடுவதுடன் குடியிருப்பு பகுதிகளுக்கும் வருகின்றன. இந்நிலையில் பந்தலூரில் இருந்து உப்பட்டி செல்லும் பிரதான சாலையில் சிறுத்தை ஒன்று வாகனத்தை கண்டவுடன் சாலையைக் கடந்து அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்கு சென்றது.



இதனால் வனப்பகுதியை ஒட்டிய தேயிலை தோட்டங்களில்அடிக்கடி நடமாடும் சிறுத்தையால் தேயிலை தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...