கீரணத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 'என் கனவு பள்ளி' திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கீரணத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற என் கனவு பள்ளி திட்ட தொடக்க விழாவில் ஜவகர்லால் நேரு பற்றி பேசிய 3ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவனுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டி தன்னுடைய பேனாவை பரிசாக வழங்கி சிறப்பித்தார்.


கோவை: RAAC தனியார் தன்னார்வ நிறுவனம் மற்றும் Bosch கார்ப்ரேட் நிறுவனம் இணைந்து உருவாக்கியது "என் கனவு பள்ளி" திட்டமாகும்.ன் இத்திட்டமானது பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதி, விளையாடுவதற்கு மைதானம், நூலகம், திறமையான ஆசிரியர்கள், சுத்தமான வகுப்பறை, சுத்தமான கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் கொண்டதாக பள்ளி இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

இத்திட்டத்தை கீரணத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் BGSW பிரிவு தலைவர் வி.எஸ்.சைஜு, முதன்மை கல்வி அலுவலர் பூபதி, கீரணத்தம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, பள்ளி தலைமையாசிரியர், பள்ளி மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஜவகர்லால் நேரு பற்றி பேசிய 3ம் வகுப்பு பயிலும், மாற்றுத்திறனாளி மாணவன் சஜீவனை மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டி தன்னுடைய பேனாவை பரிசாக வழங்கி சிறப்பித்தார்.

அதனை தொடர்ந்து இந்நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர்:-

கீரணத்தம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை மாவட்டத்தின் முன் மாதிரி பள்ளியாக மாற்றுவதற்கு Bosch Globla software technology என்ற அமைப்பு தத்தெடுத்துள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய இலக்காக கட்டமைக்கப்பட்ட முயற்சிகளால் மாணவர்களிடம் முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்தும் சமூகத்தின் வளர்ச்சியை நீடித்த வளர்ச்சியாக்க கவனம் செலுத்துகிறது. BGSW's அமைப்பு சி.எஸ்.ஆர். நிதி, (RAAC) தொண்டு நிறுவனத்தின் மூன்று ஆண்டு காலதிட்டமாகும். முதல் வருடத்தில் முக்கிய உட்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்யும்.

அதன்படி, பள்ளியில் பாதுகாப்பான, சுகாதாரமான சூழல், மாணவர்களின் வயதிற்கு ஏற்ற திறமை மற்றும் ஆசிரியர்களுக்கான

புத்தாக்க பயிற்சி ஆகியவை அளிக்கப்படும். இத்திட்டத்திற்கு என் ''கனவுப்பள்ளி''' என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாணவர்களுக்கு தங்களுடைய பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதி, விளையாடுவதற்கு மைதானம், நூலகம், திறமையான ஆசிரியர்கள், சுத்தமான வகுப்பறை, சுத்தமான கழிப்பறை உள்ளிட்டவை வசதிகள் கொண்டதாக இருக்கவேண்டும் என்று கனவுகள் இருக்கும் இதனை நிறைவற்றுவதற்கு தனியார் பங்களிப்புடன் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒரு சிறுமரம் நட்டு வைத்ததில் இருந்து எப்படி ஒவ்வொரு வருடமும் வளர்ந்து மிகப்பெரிய மரமாக உருவாகி காய் கனிகளை தருகிறதோ, அதுபோல்தான், ஒரு மாணவன் துவக்கப்பள்ளியிலிருந்து உயர்கல்வி கற்று உயர்ந்த நிலையினை அடைந்து, நிறைய மக்களுக்கு உதவிகளை செய்யவேண்டும்.

தமிழ்நாடு அரசின் சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம்தேடி கல்வி, நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் உயர்ந்த நிலைக்கு மாணவர்கள் வர உதவுதற்கு என் "கனவு பள்ளி" திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை துவக்கி வைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...