குன்னூர் அருகே கனமழையால் ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிராமப்புற சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் விழுவதும் மண் சரிவு ஏற்படுவதுமாக உள்ளது. மண் சரிவை அகற்றி சீரமைக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



நீலகிரி: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் 24மணி நேரம் தொடர்ச்சியாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் பரவலாக உள்ளது. குறிப்பாக குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் மழையின் தாக்கம் தொடர்ந்து இருந்து வரும் நிலையில் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிராமப்புற சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் விழுவதும் மண் சரிவு ஏற்படுவதுமாக உள்ளது.

அவற்றை மாவட்ட நிர்வாகம் சார்பாக உடனடியாக மீட்டு வரும் நிலையில் பணியில் ஈடுபட்டுள்ளது.



இந்நிலையில் குன்னூரில் இருந்து ஆனைபள்ளம் ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஆதிவாசி மக்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உலிக்கல் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் அதிகாரிகள் Jcp உதவியுடன் சாலையை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...