குன்னூர் அருகே கனமழையால் ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிராமப்புற சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் விழுவதும் மண் சரிவு ஏற்படுவதுமாக உள்ளது. மண் சரிவை அகற்றி சீரமைக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



நீலகிரி: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் 24மணி நேரம் தொடர்ச்சியாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் பரவலாக உள்ளது. குறிப்பாக குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் மழையின் தாக்கம் தொடர்ந்து இருந்து வரும் நிலையில் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிராமப்புற சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் விழுவதும் மண் சரிவு ஏற்படுவதுமாக உள்ளது.

அவற்றை மாவட்ட நிர்வாகம் சார்பாக உடனடியாக மீட்டு வரும் நிலையில் பணியில் ஈடுபட்டுள்ளது.



இந்நிலையில் குன்னூரில் இருந்து ஆனைபள்ளம் ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஆதிவாசி மக்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உலிக்கல் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் அதிகாரிகள் Jcp உதவியுடன் சாலையை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...