குன்னூர் அருகே கனமழையால் ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிராமப்புற சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் விழுவதும் மண் சரிவு ஏற்படுவதுமாக உள்ளது. மண் சரிவை அகற்றி சீரமைக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



நீலகிரி: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் 24மணி நேரம் தொடர்ச்சியாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் பரவலாக உள்ளது. குறிப்பாக குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் மழையின் தாக்கம் தொடர்ந்து இருந்து வரும் நிலையில் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிராமப்புற சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் விழுவதும் மண் சரிவு ஏற்படுவதுமாக உள்ளது.

அவற்றை மாவட்ட நிர்வாகம் சார்பாக உடனடியாக மீட்டு வரும் நிலையில் பணியில் ஈடுபட்டுள்ளது.



இந்நிலையில் குன்னூரில் இருந்து ஆனைபள்ளம் ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஆதிவாசி மக்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உலிக்கல் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் அதிகாரிகள் Jcp உதவியுடன் சாலையை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...