கோவையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த 9ம்தேதி மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
மேலும் நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பாப்பநாயக்கன்பாளையம் ராசகொண்டலார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகளை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அங்குள்ள படிவங்கள் அனைத்தும் சரியாக நிரப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, தெற்கு வட்டாட்சியர் கல்பனா அலமேலு, தேர்தல் துணை வட்டாட்சியர் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பாப்பநாயக்கன்பாளையம் ராசகொண்டலார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகளை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் அங்குள்ள படிவங்கள் அனைத்தும் சரியாக நிரப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, தெற்கு வட்டாட்சியர் கல்பனா அலமேலு, தேர்தல் துணை வட்டாட்சியர் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.