கோவையில் நடைபெற்ற வாக்காளர்களுக்கான சிறப்பு முகாமில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த 9ம்தேதி மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

மேலும் நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக பாப்பநாயக்கன்பாளையம் ராசகொண்டலார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகளை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



மேலும் அங்குள்ள படிவங்கள் அனைத்தும் சரியாக நிரப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது, தெற்கு வட்டாட்சியர் கல்பனா அலமேலு, தேர்தல் துணை வட்டாட்சியர் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...