நீலகிரியில் டேன் டீ தொழிலாளர் பிரச்சினை குறித்து இலங்கை தொழிலாளர் காங். தலைவர். தொண்டைமான் கொட்டும் மழையில் ஆய்வு

டேன் டீ தொழிலாளர்களின் பிரச்சனை குறித்து கூடலூரில் ஆய்வு மேர்கொண்ட பின் இதுகுறித்து பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், தமிழக முதல்வரிடம் நேரில் கோரிக்கை வைக்கப்படும் என்றார்.



நீலகிரி: 1964 ஆம் ஆண்டில் சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் மறுவாழ்வுக்காக அரசு தேயிலைத் தோட்டக் கழகம் (டேன்டீ) உருவாக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், குன்னூர், நடுவட்டம் கோவை மாவட்டம் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை வசம் இருந்த சுமார் 12 ஆயிரம் ஏக்கரில் தேயிலைத் தோட்டம் உருவாக்கப்பட்டு சுமார் 10 ஆயிரம் பேர் பணியில் அமர்த்தப்பட்டனர்.

அப்போது ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு, அரசே வீடு கட்டித் தரும் என்ற உறுதியும் அளிக்கப்பட்டது. தொடக்கத்தில் டேன் டீ நிறுவனம் லாபத்தில் இயங்கிய வந்த நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால் 3 ஆயிரம் ஏக்கர் தேயிலைத் தோட்டம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்கட்டுள்ளது.



இதற்கு டேன்டீ தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இலங்கை தொழிலளர் காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் இலங்கை அமைச்சருமான செந்தில் தொண்டமான், கூடலூர் பகுதிக்கு வந்து டேன்டீ தொழிலாளர்களை நேரில் சந்தித்து கொட்டும் மழையிலும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார்.



அதனை தொடர்ந்து தொண்டைமான் பேசியதாவது, இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய டேன்டீ தொழிலளர்கள் ஒப்பந்தப்படி தமிழக அரசு பணியமர்த்தியதாகவும் தற்போது அவர்களை பணியிலிருந்து நிறுத்தினால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

எனவே டேன்டீ தொழிலாளர் பிரச்சனை குறித்து இந்திய பிரதமர், வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோரை சந்தித்து டேன் டீ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...