மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை - தொடர்ந்து உயரும் சிறுவாணி அணையின் நீர்மட்டம்

சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக அணையின் நீர் மட்டம் 39.15 அடியாக உயர்ந்துள்ளது என்றும், விரைவில் 42 அடியை தொடும் என தகவல்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்கி வருகிறது. சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவு 49.5 அடியாக உள்ளது.

ஆனால் சிறுவாணி அணையில் 45 அடி வரை மட்டுமே நீரை தேக்க வேண்டும் கேரளா நீர் வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த தென் மேற்கு பருவ மழையின்போது இரண்டு முறை சிறுவாணி அணையின் நீர் மட்டம் 46 அடி வரை சென்றது.

அதன் பிறகு மழையளவு குறைந்த நிலையில் நீர் மட்டம் சரியத் துவங்கியது. இந்நிலையில் தற்போது வட கிழக்கு பருவமழை துவங்கியதால் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய துவங்கி உள்ளது.

சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்றிரவு 25 மி.மீ மழையும் மற்றும் அடிவாரத்தில் 21 மிமீ மழையும் பதிவானது. இதனால் மீண்டும் சிறுவாணி அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

தற்போது நீர் மட்டம் 39.15அடியாக உயர்ந்துள்ளது, தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் இரண்டு நாட்களில் 42 அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...