மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை - தொடர்ந்து உயரும் சிறுவாணி அணையின் நீர்மட்டம்

சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக அணையின் நீர் மட்டம் 39.15 அடியாக உயர்ந்துள்ளது என்றும், விரைவில் 42 அடியை தொடும் என தகவல்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்கி வருகிறது. சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவு 49.5 அடியாக உள்ளது.

ஆனால் சிறுவாணி அணையில் 45 அடி வரை மட்டுமே நீரை தேக்க வேண்டும் கேரளா நீர் வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த தென் மேற்கு பருவ மழையின்போது இரண்டு முறை சிறுவாணி அணையின் நீர் மட்டம் 46 அடி வரை சென்றது.

அதன் பிறகு மழையளவு குறைந்த நிலையில் நீர் மட்டம் சரியத் துவங்கியது. இந்நிலையில் தற்போது வட கிழக்கு பருவமழை துவங்கியதால் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய துவங்கி உள்ளது.

சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்றிரவு 25 மி.மீ மழையும் மற்றும் அடிவாரத்தில் 21 மிமீ மழையும் பதிவானது. இதனால் மீண்டும் சிறுவாணி அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

தற்போது நீர் மட்டம் 39.15அடியாக உயர்ந்துள்ளது, தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் இரண்டு நாட்களில் 42 அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...