கோவையில் கபடி போட்டியில் வென்றதால் தகராறு - இளைஞரை கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை..!

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, அம்மன் குளம் பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியில் ஏற்பட்ட தகராறில் நவீன் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் தொடர்புடைய மூன்று கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.3,500 அபராதமும் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார்.


கோவை: கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த நவீன்குமார் (23). கபடி வீரரான இவர், கடந்த பொங்கல் விழாவை முன்னிட்டு அம்மன்குளம், நியூ ஹவுசிங் யூனிட்டில் கபடி போட்டி நடைபெற்றது.

போட்டியில் தனது அணியில் விளையாட, கோவை-திருச்சி ரோட்டில் உள்ள ஹைவேஸ் காலனியை சேர்ந்த லோகேஸ்வரன் என்பவரை நவீன் குமார் அழைத்து வந்து உள்ளார்.

நவீன் பங்கேற்ற அணி வெற்றி பெற்றதாக தெரிகிறது.

இதற்கு, அதே பகுதியை சேர்ந்தவிஜயகுமார் (21), கண்ணன் (21), ஹரிகரன் (21) ஆகிய 3 பேரும் அதிருப்தி தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெளியூரை சேர்ந்த நபரை அழைத்து வந்து கபடி போட்டியில் வெற்றி பெற்றதாக கூறி நவீன் குமாரை தாக்கச் சென்றனர்.

பின்னர், அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்த அவர்கள் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

அன்றைய தினம் இரவு, நவீன்குமார் அவரது நண்பர் லோகேஸ்வரனுடன்நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது விஜயகுமார், கண்ணன், ஹரிகரன் ஆகிய 3 பேரும் அவர்கள் இருவரையும் வழிமறித்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில், ஆத்திரம் அடைந்த 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்து கத்தியை எடுத்து நவீன்குமாரின் வயிறு உள்பட பல்வேறு இடங்களில் குத்தி கொலைச் செய்தனர்.இதுகுறித்து, கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார், கண்ணன், ஹரிகரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலு, கபடி வீரர் நவீன்குமாரை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.3,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...