கோவையில் கபடி போட்டியில் வென்றதால் தகராறு - இளைஞரை கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை..!

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, அம்மன் குளம் பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியில் ஏற்பட்ட தகராறில் நவீன் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் தொடர்புடைய மூன்று கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.3,500 அபராதமும் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார்.


கோவை: கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த நவீன்குமார் (23). கபடி வீரரான இவர், கடந்த பொங்கல் விழாவை முன்னிட்டு அம்மன்குளம், நியூ ஹவுசிங் யூனிட்டில் கபடி போட்டி நடைபெற்றது.

போட்டியில் தனது அணியில் விளையாட, கோவை-திருச்சி ரோட்டில் உள்ள ஹைவேஸ் காலனியை சேர்ந்த லோகேஸ்வரன் என்பவரை நவீன் குமார் அழைத்து வந்து உள்ளார்.

நவீன் பங்கேற்ற அணி வெற்றி பெற்றதாக தெரிகிறது.

இதற்கு, அதே பகுதியை சேர்ந்தவிஜயகுமார் (21), கண்ணன் (21), ஹரிகரன் (21) ஆகிய 3 பேரும் அதிருப்தி தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெளியூரை சேர்ந்த நபரை அழைத்து வந்து கபடி போட்டியில் வெற்றி பெற்றதாக கூறி நவீன் குமாரை தாக்கச் சென்றனர்.

பின்னர், அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்த அவர்கள் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

அன்றைய தினம் இரவு, நவீன்குமார் அவரது நண்பர் லோகேஸ்வரனுடன்நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது விஜயகுமார், கண்ணன், ஹரிகரன் ஆகிய 3 பேரும் அவர்கள் இருவரையும் வழிமறித்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில், ஆத்திரம் அடைந்த 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்து கத்தியை எடுத்து நவீன்குமாரின் வயிறு உள்பட பல்வேறு இடங்களில் குத்தி கொலைச் செய்தனர்.இதுகுறித்து, கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார், கண்ணன், ஹரிகரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலு, கபடி வீரர் நவீன்குமாரை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.3,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...