கோவை கணியூரில் அமைந்துள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது

கோவை பார்க் பொறியியல் கல்லூரியில் ”விவசாயம் சார்ந்த துறையின் மேம்படுத்தப்பட்ட செயல்முறைகள்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் NABARD நிறுவனத்தின் பேராசிரியர் S. புவனேஸ்வரி கலந்து சிறப்புரையாற்றினார்.


கோவை: பார்க் பொறியியல் கல்லூரியானது கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கணியூரில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி ஆகும்.

இது இந்தியாவின் ஐந்தாவது சிறந்த பல்கலைக்கழகமாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரிக்கு ஐஎஸ்ஓ 9002 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் விவசாய பொறியியல் துறையின் சார்பாக "விவசாயம் சார்ந்த துறையின் மேம்படுத்தப்பட்ட செயல்முறைகள்" என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை 10 Nov 2022 அன்று கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு நடைபெற்றது.

இப்பயிற்சி பட்டறைக்கு வருகை தந்திருந்த அனைவரையும் கல்லூரியின் முதல்வர் Dr. லக்ஷ்மணன் வரவேற்றார்.

மாணவர்கள் இது போன்ற பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி தெரிவித்தார்.



இந்த பயிற்சி பட்டறையின் ஒரு பகுதியாக "தொழில் முனைவு மற்றும் விவசாய மருத்துவம்" என்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக Megha Group of Business நிறுவனர் S. புவனேஸ்வரி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் NABARD நிறுவனத்தின் வருகை பேராசிரியர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வேளாண் துறையின் புதிய முயற்சிகள் மற்றும் வளர்ச்சிகள் பற்றி எடுத்துரைத்தார்.

மதிய வேளையில் கருத்தரங்கில் பேசிய சிறப்பு விருந்தினர் செல்வகுமார், நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர், Greeno Tech Solutions, கோவை இந்த துறைசார்ந்த ஆராய்ச்சி வளர்ச்சி மற்றும் வாய்ப்புக்கான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.



இந்த கருத்தரங்கில் பல போட்டிகளில் கலந்து கொண்டு வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

இறுதியாக தேசிய கீதத்துடன் கருத்தரங்கு நிறைவு பெற்றது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...