கோவை தெற்கு மண்டலம் ஈச்சனாரி பகுதிகளில்‌ புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்கள் திறப்பு

கோவை தெற்கு மண்டலம் வார்டு எண்‌.97க்குட்பட்ட ஈச்சனாரியில்‌ ரூ.1.05 கோடி மதிப்பீட்டில்‌, புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்களை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.97க்குட்பட்ட ஈச்சனாரியில்‌ 97 மற்றும்‌ 100வது வார்டு பகுதிகளில்‌ 6 திட்டத்தின்‌ கீழ்‌ தலா ரூ.15 இலட்சம்‌ வீதம்‌, மொத்தம்‌ ரூ.1.05 கோடி மதிப்பீட்டில்‌, புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டன.



புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்களையும் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து அங்கன்வாடி அமைப்பாளர்களிடம்‌ சாவியை வழங்கினார்கள்‌.

பின்னர் PMJVK திட்டத்தின் கீழ்‌ தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு 15 எண்ணிக்கையில்‌ அங்கன்வாடி மையம் மற்றும்‌ 1 எண்ணிக்கையில்‌ பள்ளி கழிப்பிடம்‌ கட்டுவதற்கு ரூ.245 இலட்சம்‌ ஓதுக்கீடு செய்யப்பட்டது.



PMJVK திட்டத்தின் முதற்கட்டமாக வார்டு எண்‌.97க்குட்பட்ட ஈச்சனாரி மற்றும்‌ கோண்டிஸ்‌ காலனி ஆகிய இடங்களிலும்‌, வார்டு எண்‌.100க்குட்பட்ட மேட்டூர்‌, அம்மன்புதூர்‌, அன்னாபுரம்‌, கணேசபுரம்‌ மற்றும்‌ ஈஸ்வரன்‌ செட்டியார்‌ வீதி உள்ளிட்ட 5 இடங்களிலும்‌, தலா ரூ.15 இலட்சம்‌ வீதம்‌, மொத்தம்‌ 7 இடங்களில்‌ ரூ.1.05 கோடி மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களையும் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்‌.



இந்நிகழ்ச்சியில்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா, தெற்கு மண்டல தலைவர்‌ ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சி கார்த்திகேயன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ அப்துல்‌ காதர் ,உதயகுமார்‌, அஸ்லாம்பாஷா, உதவி ஆணையர்‌ அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, உதவி பொறியாளர்‌ சபரிராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ பலர் கலந்து கொண்டனர்‌.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...