நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ படிப்பில் முதல் இருளர் சமுதாயப் பெண் - குவியும் பாராட்டுகள்

கோத்தகிரி அருகேயுள்ள தும்பி பெட்டு இருளர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்னும் பெண் நீட் தேர்வு எழுதி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் இருளர் சமுகத்தில் மருத்துவ படிப்பிற்கு முதல் பெண்ணான ஸ்ரீமதியை நீலகிரி கலெக்டர் அம்ரித் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தும்பி பெட்டு இருளர் கிராமத்தைச் சேர்ந்த பாலன், ராதா தம்பதி இவர்களது மகள் ஸ்ரீமதி அங்குள்ள தனியார் பள்ளியில் 2019 ம் ஆண்டில் பிளஸ் டூ முடித்தார்.

பிறகு தனது மருத்துவ கனவை நனவாக்க நீட் தேர்வு எழுதினார். அதில் எதிர்பார்த்த கட்- ஆப் இல்லாததால் மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை. நீட் தேர்வுக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு படித்தார் .

4 வது முறையாக 2022 நடப்பாண்டு நீட் தேர்வில் 370 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

மாணவி ஸ்ரீமதி இது கூறித்து கூறுகையில், 2019 ம் ஆண்டில் பிளஸ் டூ முடித்தேன். மருத்துவ கனவை நனவாக்க நீட் தேர்வு எழுதினேன். போதிய கட்-ஆப் இல்லாததால் இடம் கிடைக்கவில்லை. வேறு துறையில் சேர்ந்து படிக்க எண்ணம் இல்லை மருத்துவ கனவை நனவாக்கி ஏழை, எளிய மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதுதான் என் குறிக்கோளாக இருந்ததால் 4 வது முறையாக நீட் தேர்வு எழுதி 370 மார்க் எடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது என்றார்.



இதன் மூலம் நீலகிரியில் முதல் இருளர் சமுதாயப் பெண் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



கடின உழைப்பால் தொடர்ந்து நீட் தேர்வு எழுதி மருத்துவ கனவை நனவாக்கிய ஸ்ரீமதியை இருளர் சமுதாயம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர் அவர்களை தொடர்ந்து நீலகிரி கலெக்டர் அம்ரித் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...