கோவை விமான நிலையத்தில் முதல்வருக்கு மேளதாளம் முழங்க திமுகவினர் உற்சாக வரவேற்பு

பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி விழாக்களில் பங்கேற்க கோவை விமான நிலையம் வந்த முதல்வர் மு க ஸ்டாலினுக்கு, அமைச்சர். செந்தில்பாலாஜி தலைமையில், திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.



திருப்பூர், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமானநிலையம் வந்த தமிழக முதல்வருக்கு பல ஆயிரக்கணக்கான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் மேளதாளம் முழங்க கழக கொடிகளை கையில் ஏந்தியவாறு உற்சாக வரவேற்பு அளித்தனர்.



தமிழக மின்சாரத்துறை அமைச்சர். செந்தில்பாலாஜி தலைமையில், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக்ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பின்போது, அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், முத்துச்சாமி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன், திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணைமேயர் வெற்றிச்செல்வன், மாவட்ட செயலாளர்கள், இளைஞரணியினர்மற்றும் மாவட்ட, நகர, பகுதி கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.









Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...