கோவையில் வேறொருவரின் நிலத்தை காட்டி முன்பணமாக ரூ.30 லட்சம் பெற்று மோசடி - பெண் உட்பட இருவர் கைது

ஒண்டிப்புதூர் அருகே காளப்பட்டி நேரு நகரில் வேறொவரின் நிலத்தை விற்பனை செய்வதாக கூறி முன்பணமாக ரூ.30 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் இருவர் கைது.


கோவை ஒண்டிப்புதூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கார்த்திக் பிரபு. இவர் புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டுவதற்காக கோவை ராமநாதபுரம் பகுதியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த ஜெகநாத்சிங், கலைவாணி ஆகியோரை அணுகியுள்ளார்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் காளப்பட்டி நேரு நகர் பகுதியில் வீட்டுமனை இருப்பதாக கூறி அழைத்து சென்று நிலம் ஒன்றை காண்பித்துள்ளனர். குறிப்பிட்ட அந்த நிலம் கார்த்திக் பிரபுவுக்கும், அவரது மனைவிக்கும் பிடித்திருந்ததால் வாங்க முன்வந்துள்ளனர்.

இந்த நிலத்தின் விலை ரூ.49 லட்சம் என்றும் முன்பணமாக ரூ.30 லட்சம்கொடுத்தால் தான் அடுத்தகட்ட பணியை மேற்கொள்ள முடியும் எனவும் ஜெகநாத்சிங் கூறியுள்ளார்.

இதனை நம்பிய ஆசிரியர் கார்த்திக்பிரபு அவரிடம் முன்பணமாக கேட்கப்பட்ட ரூ.30 லட்சத்தை கொடுத்துள்ளார்.

ஆனால் இதனையடுத்துவீட்டுமனையை பத்திரப்பதிவு செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை கேட்டபோதும் பணத்தையும் திருப்பி தரவில்லை என்றும் தெரிகிறது.

இந்நிலையில் ஆசிரியர் கார்த்திக்பிரபு விசாரித்த போது, இவர்களுக்கு காண்பிக்கப்பட்ட நிலமானது வேறொருவருடையது என்பதும், பொய்யாக நிலத்தை காட்டி முன்பணமாக ரூ.30 லட்சம் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.

இந்த மோசடி குறித்து கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் கார்த்திக்பிரபு புகாரளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகநாத்சிங் மற்றும் கலைவாணி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...