ஒண்டிப்புதூர் அருகே காளப்பட்டி நேரு நகரில் வேறொவரின் நிலத்தை விற்பனை செய்வதாக கூறி முன்பணமாக ரூ.30 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் இருவர் கைது.
கோவை ஒண்டிப்புதூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கார்த்திக் பிரபு. இவர் புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டுவதற்காக கோவை ராமநாதபுரம் பகுதியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த ஜெகநாத்சிங், கலைவாணி ஆகியோரை அணுகியுள்ளார்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் காளப்பட்டி நேரு நகர் பகுதியில் வீட்டுமனை இருப்பதாக கூறி அழைத்து சென்று நிலம் ஒன்றை காண்பித்துள்ளனர். குறிப்பிட்ட அந்த நிலம் கார்த்திக் பிரபுவுக்கும், அவரது மனைவிக்கும் பிடித்திருந்ததால் வாங்க முன்வந்துள்ளனர்.
இந்த நிலத்தின் விலை ரூ.49 லட்சம் என்றும் முன்பணமாக ரூ.30 லட்சம்கொடுத்தால் தான் அடுத்தகட்ட பணியை மேற்கொள்ள முடியும் எனவும் ஜெகநாத்சிங் கூறியுள்ளார்.
இதனை நம்பிய ஆசிரியர் கார்த்திக்பிரபு அவரிடம் முன்பணமாக கேட்கப்பட்ட ரூ.30 லட்சத்தை கொடுத்துள்ளார்.
ஆனால் இதனையடுத்துவீட்டுமனையை பத்திரப்பதிவு செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை கேட்டபோதும் பணத்தையும் திருப்பி தரவில்லை என்றும் தெரிகிறது.
இந்நிலையில் ஆசிரியர் கார்த்திக்பிரபு விசாரித்த போது, இவர்களுக்கு காண்பிக்கப்பட்ட நிலமானது வேறொருவருடையது என்பதும், பொய்யாக நிலத்தை காட்டி முன்பணமாக ரூ.30 லட்சம் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி குறித்து கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் கார்த்திக்பிரபு புகாரளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகநாத்சிங் மற்றும் கலைவாணி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் காளப்பட்டி நேரு நகர் பகுதியில் வீட்டுமனை இருப்பதாக கூறி அழைத்து சென்று நிலம் ஒன்றை காண்பித்துள்ளனர். குறிப்பிட்ட அந்த நிலம் கார்த்திக் பிரபுவுக்கும், அவரது மனைவிக்கும் பிடித்திருந்ததால் வாங்க முன்வந்துள்ளனர்.
இந்த நிலத்தின் விலை ரூ.49 லட்சம் என்றும் முன்பணமாக ரூ.30 லட்சம்கொடுத்தால் தான் அடுத்தகட்ட பணியை மேற்கொள்ள முடியும் எனவும் ஜெகநாத்சிங் கூறியுள்ளார்.
இதனை நம்பிய ஆசிரியர் கார்த்திக்பிரபு அவரிடம் முன்பணமாக கேட்கப்பட்ட ரூ.30 லட்சத்தை கொடுத்துள்ளார்.
ஆனால் இதனையடுத்துவீட்டுமனையை பத்திரப்பதிவு செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை கேட்டபோதும் பணத்தையும் திருப்பி தரவில்லை என்றும் தெரிகிறது.
இந்நிலையில் ஆசிரியர் கார்த்திக்பிரபு விசாரித்த போது, இவர்களுக்கு காண்பிக்கப்பட்ட நிலமானது வேறொருவருடையது என்பதும், பொய்யாக நிலத்தை காட்டி முன்பணமாக ரூ.30 லட்சம் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி குறித்து கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் கார்த்திக்பிரபு புகாரளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகநாத்சிங் மற்றும் கலைவாணி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.