கோவை நகரின் பருவநிலை மாற்ற பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பான கருத்தரங்கு

கோவை நகரின் பருவநிலை மாற்றப்‌ பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பான கருத்தரங்கை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை பந்தப சாலையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நகர காலநிலை மாற்றம்‌ தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. மத்திய அரசின்‌ வீட்டுவசதி மற்றும்‌ நகர்ப்புற விவாக அமைச்சகம்‌ உருவாக்கிய Climate Smart City Assessment Framework என்ற திட்டத்தின்கீழ்‌, கோவை நகரின் காலநிலையைத்‌ பாதுகாக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம்‌ மேற்கொண்டுள்ள முயற்சிகளின்‌ விரிவாக்கமாக இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.



கோவை நகரம் எதிர்கொண்டு வரும் காலநிலை மாற்றப்‌ பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு இந்த கருத்தரங்கம்‌ பயனுள்ள வகையில் அமைந்தது.



கருத்தரங்கில் உரையாற்றிய கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப், தமிழகத்தில்‌ உள்ள அனைத்து நகரங்களும்‌ காலநிலை மாறுபாடுகளை எதிர்கொள்வதாகவும், அதன்‌ தாக்கங்கள்‌ தற்போது நகரங்களில்‌ பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறினார். பருவநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ள இது செயல்பட வேண்டிய நேரம்‌ என்றும்‌ குறிப்பிட்டார்.



இந்த கருத்தரங்கில் மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ஷர்மிளா, தமிழ்நாடு நகர்ப்புற ஆய்வுகள்‌ நிறுவன இணை இயக்குநர் சரஸ்வதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய கண்காணிப்பு பொறியாளர்‌ செந்தில்குமார்‌, நிர்வாக பொறியாளர்‌ லட்சுமணன்‌, துணை திட்ட அலுவலர்‌ செபாஸ்டின்‌, நகாப்புற மண்டல மேலாண்மை ஆலோசகா்‌ லிஜீ, மற்றும் கோவையில்‌ உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள்‌, அரசு சாரா நிறுவனங்கள்‌, கல்வியாளர்கள்‌, வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, தமிழ்நாடு மின்சார வாரியம்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியம்‌, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்‌, வனத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை சோந்த 50-க்கும்‌ மேற்பட்ட உறுப்பினர்கள்‌ பங்கேற்றனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...