கோவை மாவட்டத்தில் உள்ள அரவை ஆலைகளில் ஆய்வு மேற்கொண்ட கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி, ஆலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
கோவை: கோவை மாவட்டத்தில் நுகர்பொருள்வாணிப கழகம் வழங்கும் நெல்களை அரிசியாக்கி தரும் அரவை மில்களில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், குடிமை பொருள்வழங்கல்குற்றப்புலனாய்வுத்துறைதலைமை இயக்குனர் ஆபாஷ் குமார் IPSநுகர்பொருள்வாணிப கழகத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோவை மண்டல காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு இருந்தார்.
அவரது உத்தரவின் பேரில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர்பாலாஜி, கோவை மாவட்டத்தில் நுகர்பொருள்வாணிப கழகம் கொடுக்கும் நெல்லை அரிசியாக்கிதரும் (Hulling mills) மில்களில் தீடீர்ஆய்வுமேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, இங்கு அரைக்கப்படும் அரிசி அரசுகிடங்குகளுக்குசெல்கிறதாஎன விசாரணை நடத்தினார். மேலும் TNCSCகொடுக்கும்நெல்லை மில் உரிமையாளர்கள்முறைகேடுகள்இன்றிஅரைத்து கொடுக்கவேண்டும்என அறிவுறுத்தினார்.
மீறும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்துஅரவை ஆலைகளுக்குசீல் வைக்கப்படும்என எச்சரிக்கை விடுத்தார்.