ஒடிசாவை சேர்ந்த 3 கஞ்சா வியாபாரிகள் கைது - கோவை தனிப்படை போலீசார் நடவடிக்கை

கருமத்தம்பட்டி காவல் நிலைய சரகம், கணியூர் வேட்டைக்காரன் குட்டை அருகே வட மாநிலத்தவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் காவல் ஆய்வாளர், ராஜதுரை தலைமையிலான போலீஸார் 500 கிராம் கஞ்சா வைத்திருந்த மூவரை பிடித்தனர்.



கோவை: கோவையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை தடுக்க போலீசார் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதனடிப்படையில் கருமத்தம்பட்டி காவல் நிலைய சரகம், கணியூர் வேட்டைக்காரன் குட்டை அருகே வட மாநிலத்தவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் காவல் ஆய்வாளர், ராஜதுரை தலைமையிலான போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அதே பகுதியில் உள்ள தனியார் மில் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து தனிப்படை விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மூவரும்கஞ்சா வியாபாரிகள் என்பது தெரியவந்தன.

ஒடிசாவைச் சேர்ந்தபனமாலை கன்கார், திகம்பர் கண்கார், தீபக் பிரதான் உள்ளிட்டோரிடமிருந்த சிறிய பேக்கை சோதனை செய்து பார்த்ததில் கஞ்சா 1/2 கிலோ இருந்துள்ளது. கஞ்சாவை பறிமுதல் செய்ய போலீசார் மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...