ஒடிசாவை சேர்ந்த 3 கஞ்சா வியாபாரிகள் கைது - கோவை தனிப்படை போலீசார் நடவடிக்கை

கருமத்தம்பட்டி காவல் நிலைய சரகம், கணியூர் வேட்டைக்காரன் குட்டை அருகே வட மாநிலத்தவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் காவல் ஆய்வாளர், ராஜதுரை தலைமையிலான போலீஸார் 500 கிராம் கஞ்சா வைத்திருந்த மூவரை பிடித்தனர்.



கோவை: கோவையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை தடுக்க போலீசார் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதனடிப்படையில் கருமத்தம்பட்டி காவல் நிலைய சரகம், கணியூர் வேட்டைக்காரன் குட்டை அருகே வட மாநிலத்தவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் காவல் ஆய்வாளர், ராஜதுரை தலைமையிலான போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அதே பகுதியில் உள்ள தனியார் மில் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து தனிப்படை விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மூவரும்கஞ்சா வியாபாரிகள் என்பது தெரியவந்தன.

ஒடிசாவைச் சேர்ந்தபனமாலை கன்கார், திகம்பர் கண்கார், தீபக் பிரதான் உள்ளிட்டோரிடமிருந்த சிறிய பேக்கை சோதனை செய்து பார்த்ததில் கஞ்சா 1/2 கிலோ இருந்துள்ளது. கஞ்சாவை பறிமுதல் செய்ய போலீசார் மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...