திருப்பூரில் ரூ.1.2 கோடி மதிப்பிலான துணை மின்நிலையத்தை திறந்து வைத்த ஆட்சியர் வினீத்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 1.2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 16 mva திறன் கொண்ட துணை மின் நிலையத்தின் மூலம் 12கிலோமீட்டர் சுற்றளவுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியும்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.



அதன்படி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூபாய் 1.2 கோடி செலவில், 16 mva திறன் உள்ள துணை மின் நிலையம் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பயன்பாட்டிற்கு தயாராக உள்ள துணை மின் நிலையங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டப்பட்ட துணை மின் நிலையத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் இன்று ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.



இந்த 16 mva திறன் கொண்ட துணை மின் நிலையம் மூலம் 12கிலோமீட்டர் சுற்றளவுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியும். இதில் வீடுகள், தொழில் நிறுவனங்கள் என 6,500 இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...