திருப்பூரில் ரூ.1.2 கோடி மதிப்பிலான துணை மின்நிலையத்தை திறந்து வைத்த ஆட்சியர் வினீத்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 1.2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 16 mva திறன் கொண்ட துணை மின் நிலையத்தின் மூலம் 12கிலோமீட்டர் சுற்றளவுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியும்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.



அதன்படி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூபாய் 1.2 கோடி செலவில், 16 mva திறன் உள்ள துணை மின் நிலையம் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பயன்பாட்டிற்கு தயாராக உள்ள துணை மின் நிலையங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டப்பட்ட துணை மின் நிலையத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் இன்று ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.



இந்த 16 mva திறன் கொண்ட துணை மின் நிலையம் மூலம் 12கிலோமீட்டர் சுற்றளவுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியும். இதில் வீடுகள், தொழில் நிறுவனங்கள் என 6,500 இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...