கோவையில் நகர்ப்புற வளர்ச்சித் திட்ட வீடுகளை விற்பனை செய்யும் திமுக கவுன்சிலர் - ஆட்சியரிடம் மக்கள் மனு

தங்களுக்கென புதிதாக கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை வார்டு கவுன்சிலர் சிவசக்தி, பிறருக்கு விற்பனை செய்வதாகவும், தங்கள் வீடுகளை தங்களுக்கே ஒதுக்கித் தரும்படியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு.


கோவை: கோவை மாவட்டம் செல்வபுரம் காலனி பகுதியில் உள்ள மக்களுக்காக குடிசை மாற்று வாரியம் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை திமுக வார்டு கவுன்சிலர் தனியாருக்கு விற்பனை செய்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



மாவட்ட ஆட்சியரிடம் செல்வபுரம் காலனி மக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்,

செல்வபுரம் காலனி பகுதியில் 40 ஆண்டுகளாக வசித்து அப்பகுதி மக்கள் வந்த வீடுகள் பழுதடைந்துள்ளதால், குடிசை மாற்று வாரியம் மூலம் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் இன்னும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் வேலை தாமதமாக நடைபெற்று வருகிறது.

24 மணி நேர குடிநீர் வழங்காமல் பைப்புகள் மட்டும் போடப்பட்டுள்ளது. எனவே மின் இணைப்பு மற்றும் சிறுவாணி குடிநீர் வேலைகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.

மேலும் தற்பொழுது கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் தரைத்தளம் முதல் இரண்டாம் தளம் வரை ஏற்கனவே அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடியிருந்து வருகின்றனர். அந்த வீடுகளை இம்மாதத்திற்குள் அவர்களுக்கே ஒதுக்கீடு செய்து தர வேண்டும். குலுக்கல் முறையில் வீடுகளை ஒதுக்க கூடாது.

மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை ஆறு லட்சம் ஏழு லட்சம் என விலை பேசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 78 வது வார்டு திமுக கவுன்சிலர் சிவசக்தி மற்றும் அவரது அண்ணன் மணிகண்டன்(திமுக செல்வபுரம் பகுதி செயலாளர்) ஆகியோர் சில நபர்களை அழைத்து வந்து புரோக்கர் மூலம் வீடுகளை விற்பனை செய்து வருகிறார்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளை அமைச்சரின் பெயரை சொல்லி மிரட்டுகிறார். எனவே மாவட்ட ஆட்சியர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...