தமிழக காவல்துறை மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியை, அவதூராக பேசி கோவையின் ஒற்றுமை, அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயலும் பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.
கோவை: கோவையின் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்றுதிராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த மாதம் 23ஆம் தேதி கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
இதற்கு தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் டிஜிபி சைலேந்திரபாபு எதிர் கருத்து தெரிவித்திருந்தார்.அதேபோல, திராவிட இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக இயக்கங்கள் அண்ணாமலையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், இன்று திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில்செயலாளர் கா.சு.நாகராஜ் தலைமையில், அண்ணாமலையை கைது.செய்ய வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக காவல்துறையையும், அமைச்சர் செந்தில் பாலாஜியையும், அவதூராக பேசி கோவையின் ஒற்றுமை, அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயலும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தி கண்டனங்களை தெரிவித்தனர்.


கடந்த மாதம் 23ஆம் தேதி கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
இதற்கு தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் டிஜிபி சைலேந்திரபாபு எதிர் கருத்து தெரிவித்திருந்தார்.அதேபோல, திராவிட இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக இயக்கங்கள் அண்ணாமலையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், இன்று திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில்செயலாளர் கா.சு.நாகராஜ் தலைமையில், அண்ணாமலையை கைது.செய்ய வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக காவல்துறையையும், அமைச்சர் செந்தில் பாலாஜியையும், அவதூராக பேசி கோவையின் ஒற்றுமை, அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயலும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தி கண்டனங்களை தெரிவித்தனர்.