கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழக காவல்துறை மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியை, அவதூராக பேசி கோவையின் ஒற்றுமை, அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயலும் பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.


கோவை: கோவையின் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்றுதிராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கடந்த மாதம் 23ஆம் தேதி கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இதற்கு தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் டிஜிபி சைலேந்திரபாபு எதிர் கருத்து தெரிவித்திருந்தார்.அதேபோல, திராவிட இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக இயக்கங்கள் அண்ணாமலையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், இன்று திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில்செயலாளர் கா.சு.நாகராஜ் தலைமையில், அண்ணாமலையை கைது.செய்ய வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தமிழக காவல்துறையையும், அமைச்சர் செந்தில் பாலாஜியையும், அவதூராக பேசி கோவையின் ஒற்றுமை, அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயலும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தி கண்டனங்களை தெரிவித்தனர்.



Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...