டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் பட்டாக்கத்தியை காட்டி ரூ.10 லட்சத்தை பறிக்க முயன்ற 5 பேர் கைது

சிறுமுகை அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சிவகங்கை, கோவை, தஞ்சையை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் சிறுமுகையில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மேற்பார்வையாளராக நீலகிரியை சேர்ந்த விஜய் ஆனந்த்(46) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கடையின் ரூ.10 லட்சம் கலெக்‌ஷன் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் இந்தியன் வங்கிக்கு சென்றுள்ளார்.



அப்போது, சிறுமுகை அடுத்த ஆலாங்கொம்பு பகுதியில் 2 இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்து வந்த 4 பேர், விஜய் ஆனந்தை வழிமறித்து அரிவாளலை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.



பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.





இந்நிலையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் விஜய் ஆனந்தை தாக்கி பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன் (22), ஆகாஷ் (19), மற்றும் தஞ்சாவூர் சேர்ந்த ரவிக்கண்ணன் (19), கோவையை சேர்ந்த சதீஷ் (19) நான்கு பேரை கைது செய்தனர்.



இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் கடந்த ஜூலை மாதம் இதே மேற்பார்வையாளரிடம் ரூ.15 லட்சம் கொள்ளையடிக்க முயன்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (21), என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.



மேலும், அவர்களிடமிருந்து பட்டாக் கத்தி மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கோவை, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் செயின் பறிப்பு, கொள்ளை, இரு சக்கர வாகனம் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...