திருப்பூரில் கிரிண்டர் (Grindr) எனும் செல்போன் செயலி மூலம் ரூ.90,000 வழிப்பறி; மூவர் கைது

திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிரிண்டர் செயலி மூலம் ஒருவரை நேரில் வரவழைத்து வழிப்பறியில் ஈடுபட்ட கிஷோர் குமார், தனபால், சுபாஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் கிரிண்டர் எனும் செல்போன் செயலி மூலம் வழிபறியில் ஈடுபட்ட மூன்று பேரை திருமுருகன்பூண்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

கிரிண்டர் ஆப் எனும் செல்போன் செயலி மூலம் அவர்களது செல்போன் எண்ணில் தொடர்பு அவர்களை நேரில் வரவழைத்து வழிப்பறியில் ஈடுபடும்.சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

அதன்படி, திருப்பூர் மாநகராட்சி அம்மாபாளையம் முதல் வீதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது செல்போனில் கிரிண்டர் செயலி மூலம் சில அடையாளம் தெரியாத நபர்கள் அறிமுகம் ஆகியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் கூறிய இடத்திற்கு கார்த்திக் சென்றபோது அங்கிருந்த கிஷோர் குமார், தனபால், சுபாஷ் ஆகிய மூன்று பேரும் கார்த்திக்கை மிரட்டி அவரிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து, திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் கார்த்திக் அளித்த புகாரின் அடிப்படையில் மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...