பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்தி வந்த 2 டன் குட்கா சிக்கியது - ஆம்னி பேருந்து உட்பட 8 பேர் கைது

கோவை அவினாசி சாலையில் நடைபெற்ற வாகன சோதனையில் 2 டன் குட்கா மாறும் 20 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு 8 பேர் கைத செய்யப்பட்டனர் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு குவியும் பாராட்டுகள்.


கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி.உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவினாசி சாலை நீலாம்பூர் தனியார் நட்சத்திர விடுதி அருகே சூலூர் தனிப்படை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் சுமார் 500 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பேருந்தில் இருந்த செந்திகுமார் (47), மேகபூ பாஷா (30), செந்தில்ராஜா (44), ஜெயபிரகாஷ் (39) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.



மேலும் ஆம்னி பேருந்து மற்றும் குட்காவை வாங்கிச் செல்ல வந்த கார் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் மயிலம்பட்டி கிராமத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட போது அங்கு வாடகைக்கு அறை எடுத்து குட்காவை பதுக்கி வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பரத் பட்டேல் (26), அமரராம் (22), கோபால் (22), மைபால் (22) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.



மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார் 1.5 டன் குட்கா பொருட்கள் மற்றும் கார், இரு சக்கர வாகனங்கள் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.



கைது செய்யப்பட்ட 8 பேரையும் தனிப்படை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



முன்னதாக மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.



மேலும் சிறப்பாக பணியாற்றி 2 டன் குட்கா மற்றும் வாகனங்கள், ரூ.20 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து 8 பேரை கைது செய்த காவலர்களை பாராட்டினார்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...