கோவை வார்டு எண்: 11 வால்பாறையில் கிராம சபை கூட்டம் - கோரிக்கைகளை மனுவாக வழங்கிய மக்கள்

வால்பாறையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், அப்பகுதியில் உள்ள பிரச்சினைகளை மனுவாக வார்டு உறுப்பினர் மற்றும் அதிகாரிகளிடம் வழங்கிய நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.



கோவை: கோவை வால்பாறை பகுதியில் 11வது வார்டுக்கு உட்பட்ட கிராமங்களுக்கான கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



வார்டு உறுப்பினர் செந்தில்குமார்  தலைமையில் காமராஜ் நகர பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காமராஜ் நகர், துளாசிங் நகர், நடுமலை, பச்சமலை, ஆகிய பகுதியில் உள்ள மக்கள் கலந்து கொண்டனர்.



மேலும் இந்த கூட்டத்தில், நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, நகராட்சி ஆணையாளர் பாலு, நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் நகராட்சி மேலாளர் சலாவுதீன் ஆகியோர்களின் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள பிரச்சனைகளை மனுக்களாக எழுதி, வார்டு உறுப்பினர் செந்தில்குமார்,   நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் நகர மன்ற தலைவர் உள்ளிட்டோரிடம் வழங்கினர்.

பொதுமக்கள் வழங்கிய மனுவில் அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்கு அமைக்க வேண்டும். ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு தடுப்பு சுவர் கட்டி தர வேண்டும். சாக்கடை கால்வாய் கட்டி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த கோரிக்கை மனுவிற்கு உடனடியாக நகர மன்ற கூட்டத்தில் பரிசீலனை செய்து தீர்வு காணப்படும் என்று நகர மன்ற தலைவர் உறுதியளித்தார். 

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...