கோவையில் மதுபோதையில் உருட்டு கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை - போலீசார் விசாரணை

கோவை சரவணம்பட்டி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொலை செய்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



கோவை: கோவை கணபதி அண்ணா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (53). கூலி தொழிலாளியான இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், குடிபோதைக்கு அடிமையான வெங்கடேஷ் தினமும் வேலை முடிந்து மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதேபோல் நேற்றிரவு வேலை முடிந்து அவர் அப்பகுதியில் உள்ள நகர் நல மையம் அருகே சிலருடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

அப்போது வெங்கட்டேஷுக்கும் மற்றொருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் கீழே கிடந்த உருட்டு கட்டையால் வெங்கடேஷை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, பயந்து போன அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், வெங்கடேஷ் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வெங்கடேஷை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...