கோவை வேளாண்‌ பல்கலை.-யில்‌ வரும் நவ.7ஆம் தேதி தேனீ வளர்ப்பு குறித்த ஒருநாள்‌ பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறை சார்பில், வரும் நவம்பர் 7ஆம் தேதி தேனீ வளர்ப்பு தொடர்பான ஒருநாள் தொழில்நுட்ப பயிற்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வரும் 7ஆம் தேதி தேனீ வளர்ப்பு தொடர்பான ஒருநாள் பயிற்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில், பூச்சியியல்‌ துறை சார்பில் ஒவ்வொரு மாதமும்‌ தேனீ‌ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள்‌ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நவம்பர் மாதத்திற்கான பயிற்சி தொடர்பாக பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

வரும் திங்கள்கிழமை (07.11.2022) அன்று கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வரும் 7ஆம் தேதி தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. .

இந்த பயிற்சியின்‌ முக்கிய அம்சங்கள், ‌

1) தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல்‌

2) பெட்டிகளில்‌ தேனீ வளர்க்கும்‌ முறை மற்றும்‌ நிர்வாகம்‌

3) தேனீக்கு உணவு தரும்‌ பயிர்கள்‌ மற்றும்‌ மகரந்த சேர்க்கை மூலம்‌ மகசூல்‌ அதிகரிக்கும்‌ பயிர்களின்‌ விவரம்‌

4) தேனைப்‌ பிரித்தெடுத்தல்‌

5) தேனீக்களின்‌ இயற்கை எதிரிகள்‌ மற்றும்‌ நோய்‌ நிர்வாகம்‌

இந்த பயிற்சியில்‌ கலந்துகொள்ள விரும்புவோர்‌, பயிற்சி நாளன்று காலை 9.00 மணிக்கு பூச்சியியல்‌ துறை, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திற்கு வந்து அடையாள சான்று சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் அப்போதே, பயிற்சிக்‌ கட்டணம்‌ ரூ.590/- (ரூபாய்‌ ஐநூற்று தொண்ணூறு மட்டும்‌) நேரடியாக செலுத்த வேண்டும்‌.

காலை 9.00 முதல்‌ மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சியின்‌ இறுதியில்‌ சான்றிதழ்‌கள் வழங்கப்படும்‌.

அணுக வேண்டிய முகவரி:

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, வேளாண்‌ பூச்சியியல்‌ துறை,

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்‌ கழகம்‌,

கோயம்புத்தூர்‌

மேலும்‌ விவரங்களை அறிந்து கொள்ள, 0422-6611214 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...