பல்லடம் அருகே பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மூன்று பேர் ஒருவரை ஒருவர் தாக்கினர்

பல்லடம் அருகே ஹெட்போன் தராததால் நண்பர்களுக்குள் தகராறு. ஓடும் பேருந்தில் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கியதில் கார்த்தி என்பவருக்கு தலையில் காயம். போலிசார் விசாரணை நடத்தி வருகினறனர்



கோவை: கோவையிலிருந்து சிவகாசி செல்லும் பேருந்தில் பல்லடத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரும் மதுரையை சேர்ந்த ராஜேஷ் மற்றும் சேது என்பவரும் ஒரு இருக்கையில் அமர்ந்து பயணித்து வந்துள்ளனர்.

அப்போது கார்த்திக் என்பவரின் ஹெட்போனை ராஜேஷ் என்பவர் பயன்படுத்தி வந்துள்ளார். இதனையடுத்து பல்லடம் அருகே பேருந்து வரும் போது கார்த்திக் ராஜேஷிடம் எனது ஹெட் போனை தாருங்கள் என கேட்டுள்ளார்.

அதில் ராஜேஷ் தர மறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ராஜேஷ் மற்றும் அவரது நண்பர் சேது ஆகிய இருவரும் சேர்ந்து கார்த்தி சரமாரியாக தாக்கி உள்ளனர்.



இதில் கார்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



மேலும் இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ராஜேஷ் மற்றும் சேதுவை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓடும் பேருந்தில் பல்லடம் அருகே பயணிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...