கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள வேலாயுதம்பாளையம் கல்லன்காட்டு தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் விவசாயி அப்புசாமி. இவர் தொண்டை புற்றுநோய் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நோயின் தீவிரம் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் அருந்த முடியாத நிலை ஏற்பட்டதால் அப்புசாமி மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே இன்று காலை வழக்கம் போல் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது மகன் சக்திவேல், வீட்டின் அருகே உள்ள கிணற்றிக்கு சென்று பார்த்த போது அப்புசாமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவத்திற்கு வந்த தீயனைப்பு துறையினர் அப்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.