கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்குட்பட்ட பகுதியில்‌ கிராம சபா கூட்டம்‌ நடைபெற்றது

கோவை வடக்கு மண்டலம்‌ கணபதி, நேரு நகர்‌ பகுதிகளில் மாநாகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர்‌ முன்னிலையில்‌ நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் பொதுமக்கள்‌ தங்களது கோரிக்கை மனுக்களை மேயரிடம் வழங்கினார்கள்‌.


கோவை: கோவை வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்குட்பட்ட கணபதி, நேரு நகர்‌ பகுதிகளில் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ ‌தலைமையில்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌ முன்னிலையில்‌ இன்று கிராம சபா கூட்டம்‌ நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. கிராம சபை கூட்டமானது உள்ளாட்சி தினமான நவம்பர் மாதம் 1-ந் தேதி நடைபெறும்.



கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் முறையில் நடைபெற்ற சபா கூட்டத்தில் ‌பொதுமக்கள்‌ தங்களது கோரிக்கை மனுக்களை மேயரிடம் வழங்கினார்கள்‌.

இக்கூட்டத்தில்‌ மேயர்‌ ‌மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவித்ததாவது,



தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஆணைக்கிணங்க கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ 100 வார்டுகளிலும்‌ வார்டு சபா கூட்டம்‌ நடத்திட உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்‌ ஒரு பகுதியாக மேயர்‌ 19-வது வார்டு பகுதியில்‌ வார்டு சபா கூட்டமானது தற்போது நடைபெற்றது.

கோவை மாநகராட்சியின்‌ 100 வார்டுகளிலும்‌ மொத்தமாக 25 இலட்சத்திற்கும்‌ மேற்பட்ட மக்கள்‌ வசிக்கின்றனர்‌. இந்த வார்டு சபாவின்‌ முக்கிய நோக்கம்‌ மக்களின்‌ தேவைகளை இக்கூட்டங்களின்‌ மூலம்‌ கோரிக்கைகளாக பெறப்பட்டு, அவற்றை நிவார்த்தி செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்‌.

முதல்வரின் முக்கிய கொள்கை அரசை தேடி மக்கள்‌ வருவதை தவிர்த்து மக்களைத்‌ தேடி அரசு செல்வதை கொள்கையாக கொண்டவர்‌. பொதுமக்கள்‌ தங்களது பகுதிகளில்‌ உள்ள கோரிக்கைகளை இந்த வார்டு சபா கூட்டத்தில்‌ மனுக்களாக கொடுக்கலாம்‌ என்றார்.

மேலும்‌, இந்த 19-வது வார்டை அனைத்து வார்டுகளுக்கும்‌ முன்மாதிரி வார்டாக மாற்றிட பொதுமக்கள்‌ தங்களது ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்‌” என மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ தெரிவித்தார்கள்‌.

இந்நிகழ்ச்சியில்‌ உதவி செயற்பொறியாளர்‌ செந்தில் பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர்‌ விமலா, மண்டல சுகாதார அலுவலர்‌, இராதாகிருஷ்ணன்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌, மற்றும்‌ ஏராளமான பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...