சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக இஸ்லாமியர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 15.வேலம்பாளையம், அவிநாசி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்களின் மத வழிபாட்டு உரிமையை பறிக்கும் வகையில் ஒரு சில அதிகாரிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



இதனை கண்டித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினரின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், 15 வேலம்பாளையம் மசூதி தொடர்பாக தனி நபர்கள் தொடுத்த வழக்கின் காரணமாக இஸ்லாமியர்களின் தொழுகை உரிமையை மறுக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.



இதன் காரணமாக வழிபாட்டு உரிமையை மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்கும் வகையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...